உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

பா.ஜ.க. மனித சங்கிலி போராட்டம்

Published On 2022-01-12 10:00 GMT   |   Update On 2022-01-12 10:00 GMT
வேலூரில் பா.ஜ.க. மனித சங்கிலி போராட்டம் செய்தனர்
வேலூர்:

வேலூர் காந்தி சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சி பிரசார பிரிவு, அமைப்புசாரா மற்றும் வணிகம், ஓ.பி.சி. பரிவு சார்பாக பஞ்சாப்பில் பாரத பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட காங்கிரஸ் அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் பிரசார பிரிவு மற்றும் ஓ.பி.சி. தலைவர்கள் செந்தில், சதிஷ், சினிவாசலு ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர் தசரதன் ஆகியோர் கலந்து கொண்டார். 

இதில் வணிக பிரிவு மாநில செயலாளர் இளேங்கோ, மாவட்ட துணை தலைவர் ஜெகன்நாதன், பொதுசெயலாளர்கள் பாஸ்கர், பாபு. மாநில செயற்குழு உறுப்பினர் குட்டி, மாநகர் மண்டல தலைவர்கள், ஜெகன். தேவராஜ், முருகன், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட செயலாளர் எஸ்.கே.மோகன், ராஜேஷ், செல்வராஜ், மாநில அணி, பிரிவு, பொறுப்பாளர்கள் மாவட்ட அணி, பிரிவு பொறுப்பாளர்கள், நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சுமார் 100 பேர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News