உள்ளூர் செய்திகள்
மாணவிக்கு கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை
வேலூர் முத்துரங்கம் கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வேலூர்:
வேலூர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் இன்று பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில் முத்துரங்கம் அரசு கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த புகார் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி பேராசிரியர் மீது மாணவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.