உள்ளூர் செய்திகள்
வேலூர் கொணவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாமை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

Published On 2022-01-10 14:42 IST   |   Update On 2022-01-10 14:42:00 IST
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது.
வேலூர்:

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது.

பூஸ்டர் தடுப்பூசி என்பது, ஒருவர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதில் இருந்து 90 நாட்களை கடந்தவர்களுக்கு செலுத்தப்படுவதாகும். 

அதாவது, ஒருவர் தன்னுடைய 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி, 90 நாட்கள் ஆன நிலையில் பூஸ்டர் அதாவது 3-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராகியிருக் கிறார் என்பதாகும்.

இந்த பூஸ்டர் தடுப்பூசி, முதல் கட்டமாக முன்களப்பணியாளர்களாக அறியப்படும் மருத்துவத்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, போலீஸ் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செலுத்தப்படுகிறது.

இந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 451 பேர், திருப்பத்து£ர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 800 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 ஆயிரம் பேருக்கு இன்று முதல் செலுத்தப்பட உள்ளது.

வேலூர் கொணவட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார மையங்களில் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்படுகிறது.

 ஏற்கனவே 2-வது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி தற்போது செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் காந்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நகராட்சி கமிஷனர் ஏகராஜ்,  சுகாதார துணை இயக்குனர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கலெக்டர் அமர் குஷ்வாகா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைத்தார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் முருகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 6807 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Similar News