உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்.

கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

Published On 2022-01-10 09:00 GMT   |   Update On 2022-01-10 09:00 GMT
குடியாத்தம் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்த வருகிறது.
குடியாத்தம்:

குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கொரனோ தோற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேலு பாண்டியன், வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சுரேந்திரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், சுகாதார ஆய்வாளர் பாலசந்திரன், சுகாதாரப்பணிகள் மேற்பார்வையாளர் பிரபுதாஸ் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், 

தூய்மைப் பணியாளர்கள் குடியாத்தம் நகராட்சி பகுதியில் 3 வாகனங்களிலும் மற்றும் கை தெளிப்பான்கள் மூலமும் நகரின் முக்கிய பகுதிகளான புதிய பழைய, பஸ் நிலையங்கள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News