உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இன்று 294 பேருக்கு கொரோனா

Published On 2022-01-10 14:25 IST   |   Update On 2022-01-10 14:25:00 IST
வேலூர் மாவட்டத்தில் இன்று 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 51,891 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,417 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,145 பேர் பலியானார்கள். தற்போது 1,329 பேர் சிகிச்சையின் உள்ளனர்.

இன்று 294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வேலூர் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிமாவட்டத்தினர் உள்ளனர்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 130&க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர்.

தற்போது பாதிப்பு ஏற்பட்ட வர்களில் 80 சதவீதத்திற்கு மேற் பட்டோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை.

மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். 

கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News