உள்ளூர் செய்திகள்
முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனால் வேலூர் மாநகர பகுதியில் பால் மெடிக்கல் ஆஸ்பத்திரிகள் தவிர வேறு எதுவும் திறக்கப்படவில்லை. வேலூர் அண்ணா சாலை, காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு, ஆரணி ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
காட்பாடி காந்திநகர் மற்றும் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, விஐடி சாலை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டத்தின் புறநகர் பகுதியான குடியாத்தம், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கே. வி குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலூர் மாநகரப் பகுதியில் நேற்று மாலை காய்கறி மற்றும் மீன் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக இறைச்சி கடைகளில் பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு மீன் கோழி ஆடு இறைச்சிகளை வாங்கி சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க மாநில, மாவட்ட எல்லைகள் உட்பட100- க்கும் மேற்பட்ட இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆஸ்பத்திரி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்களுக்கு உரிய ஆதாரங்களை காண்பித்த பிறகு போலீசார் செல்வதற்கு அனுமதி அளித்தனர்.
ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வருவபவர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
வெளியூர்களில் இருந்து வேலூர் திரும்புபவர்கள் இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்ல வாகன வசதி இல்லை என்றால்,
வேலூர் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாடு அறை 9498181358, 9092700100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவி, சந்தேகங்களுக்கு கேட்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.