உள்ளூர் செய்திகள்
வேலூரில் இன்று 315 பேருக்கு கொரோனா
வேலூர் மாவட்டத்தில் இன்று 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 51,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 49,366 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,145 பேர் பலியானார்கள். தற்போது 1078 பேர் சிகிச்சையின் உள்ளனர்.
இன்று 315 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வேலூர் மட்டுமின்றி வெளிமாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டத்தினர் உள்ளனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 130-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ளனர். வேலூர் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 400 படுக்கைகளும் வி ஐடி பல்கலைகழகத்தில் 700 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயாராக உள்ளன.
தற்போது பாதிப்பு ஏற்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை உள்ளவர்களில் இதுவரை யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை.
மேலும் கூடுதலாக படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூக பரவலாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம்.முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.