உள்ளூர் செய்திகள்
வேலூர் லாங்கு பஜாரில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆய்வு செய்த கட்சி.

நேதாஜி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு

Published On 2022-01-06 14:23 IST   |   Update On 2022-01-06 14:23:00 IST
வேலூரில் கொரோனா பரவலை தடுக்க நேதாஜி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.மார்க்கெட் பகுதிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அங்கு வரும் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இன்று காலையில் வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட் மற்றும் லாங்கு பஜார் பழ கடைகள் உள்ள இடங்களில் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆய்வு செய்தார். மேலும் புதிய மீன் மார்க்கெட் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் மார்க்கெட் செயல்பட்டது. அந்த இடத்தையும் பார்வையிட்டார்.

மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன், உதவி கமிஷனர் வசந்தி, மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து விரைவில் மார்க்கெட் கடைகள் இடமாற்றம் குறித்து காட்பாடியில் வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஆண்டு கடைகளில் மாற்றம் செய்த போது வியாபாரம் சரியான அளவில் இல்லை.

மேலும் பல இன்னல்கள் சந்தித்தோம். கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டாம் என அவர்கள் தெரிவித்தனர்.

கடைகள் இடமாற்றத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News