உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
வேலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 87 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 57 சதவீதம் பேருக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
வேலூர்:
தமிழகம் முழுவதும் 17-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்பட 505 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை சிறப்பு முகாம் நடந்தது. இதில், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக 2-வது தவணை கொரோனா தடுப்பூசி அதிக நபர்கள் போட்டு கொண்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோன்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மாநகர் நலஅலுவலர் மணிவண்ணன் ஆகியோரும் பல்வேறு இடங்களில் நடந்த முகாமை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 38,543 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 87 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 57 சதவீதம் பேருக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 17-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்பட 505 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை சிறப்பு முகாம் நடந்தது. இதில், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக 2-வது தவணை கொரோனா தடுப்பூசி அதிக நபர்கள் போட்டு கொண்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோன்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி, வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மாநகர் நலஅலுவலர் மணிவண்ணன் ஆகியோரும் பல்வேறு இடங்களில் நடந்த முகாமை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 38,543 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 87 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 57 சதவீதம் பேருக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.