உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அணைக்கட்டு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி

Published On 2021-12-31 15:57 IST   |   Update On 2021-12-31 15:57:00 IST
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி 8-ம் வகுப்பு படிக்கும் அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து அவரது தாயாரிடம் தெரிவித்தார்.

மாணவியின் தாயார் இதுபற்றி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News