உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

தனியார் ஆஸ்பத்திரி வளாக விடுதியில் மருத்துவ மாணவர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2021-12-28 16:30 IST   |   Update On 2021-12-28 16:30:00 IST
வேலூர் தனியார் ஆஸ்பத்திரி வளாக விடுதியில் மருத்துவ மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

மதுரையை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 23). வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் முதுகலை பட்ட படிப்பு படித்து வந்தார்.

இவர் சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை.

இதனால் அங்கிருந்தவர்கள் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அறையில் உள்ள படுக்கையில் ஜோஸ்வா இறந்து கிடந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ மாணவர் ஜோஸ்வா எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சி.எம்.சி. ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News