உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

Published On 2021-12-26 09:28 GMT   |   Update On 2021-12-26 09:28 GMT
சூளகிரி அருகே மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதனாசேரியை சேர்ந்தவர் ராகுல் (வயது18). இவர், வாட்டர் சர்வீஸ் நிலையம் நடத்தி வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான ஷியாம், கோகுல் ஆகியோருடன், மோட்டார் சைக்கிளில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். சூளகிரி அருகே மேலுமலை அருகே சென்றபோது, முன்னால் சென்ற மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த, ராகுல், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். ஷியாம், கோகுல் லேசான காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News