உள்ளூர் செய்திகள்
வேலூரில் பிரபல ரவுடி வீச்சு தினேஷ் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி வீச்சு தினேஷ் உள்பட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பிரபல ரவுடி வீச்சு தினேஷ் (வயது 34). இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே பகுதியை சேர்ந்தவர் பிரபு இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி வீச்சு தினேஷ், பிரபு ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணை அவர்களிடம் வழங்கப்பட்டது.
குடியாத்தம் பகுதியில் வேல்முருகன் (வயது 50) என்பவர் தொடந்து கள்ளசாராயம் காய்ச்சி வந்தார். இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பிரபல ரவுடி வீச்சு தினேஷ் (வயது 34). இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே பகுதியை சேர்ந்தவர் பிரபு இவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவர்கள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி வீச்சு தினேஷ், பிரபு ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணை அவர்களிடம் வழங்கப்பட்டது.
குடியாத்தம் பகுதியில் வேல்முருகன் (வயது 50) என்பவர் தொடந்து கள்ளசாராயம் காய்ச்சி வந்தார். இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.