உள்ளூர் செய்திகள்
பலி

சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பலி

Published On 2021-12-22 15:47 IST   |   Update On 2021-12-22 15:47:00 IST
பள்ளிகொண்டா அருகே சாலையை கடக்க முயன்றவர் பஸ் மோதி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அணைக்கட்டு:

பள்ளிகொண்டாவை அடுத்து கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேலூரில் இருந்து ஆம்பூரைநோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். பஸ் டிரைவர் கேசவனிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த நபர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News