உள்ளூர் செய்திகள்
சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவினாசி:
அவினாசியை அடுத்த செங்காளிபாளையம் கவுசிகா நதி பள்ளத்தில் சிலர் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுப்பிரமணி (வயது28), நந்தகுமார் (32), மணிராஜ் (29), மாரியப்பன் (30), சின்ராஜ் (22), மனோஜ்குமார் (25), பிரபு (35), சபரீஸ்குமார் (32), பார்த்திபன் (22), திருநாவுக்கரசு (31), சுந்தரம் (33), செந்தில்குமார் (32) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த ரூ.13,500 மற்றும் 4 சேவல்களையும் போலீசார் கைப்பற்றினர்.