உள்ளூர் செய்திகள்
தாக்குதல்

கே.வி.குப்பம் அருகே வீட்டுமனை தகராறில் வாலிபர் மீது தாக்குதல்

Published On 2021-12-21 11:31 GMT   |   Update On 2021-12-21 11:31 GMT
கே.வி.குப்பம் அருகே வீட்டுமனை தகராறில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:

கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜின் மகன் சத்யா (29).

பி.கே.புரத்தைச் சேர்ந்த பார்த்திபன் வீட்டின் அருகில் சுவர் கட்டும் பணி நடந்தது. அங்குள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சத்யா வந்திருந்தார். அப்போது வீட்டுமனை அளவு தொடர்பாக சத்யாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு தொடர்பாக பார்த்திபன் தனது நண்பர் விக்னேசிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் பார்த்திபனுக்கு ஆதரவாக செயல்பட்டு காங்குப்பம் வீட்டில் இருந்த சத்யாவை தனது கையில் அணிந்திருந்த கை காப்பால் குத்தி தாக்கினார். அதில் படுகாயம் அடைந்த சத்யா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசார் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News