உள்ளூர் செய்திகள்
வங்கிகள் போராட்டம்

வேலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

Published On 2021-12-17 11:01 GMT   |   Update On 2021-12-17 11:01 GMT
வேலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று 220 வங்கிகளில் பணியாற்றும் 1500 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:

வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.

வேலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று 220 வங்கிகளில் பணியாற்றும் 1500 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அண்ணாசாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி அருகே வங்கி ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இன்று 2- வது நாளாக இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் காசோலைகள் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டன. ஆன்லைன் சேவைகள் வழக்கமாக நடைபெறுகிறது. சில இடங்களில் ஏ.டி.எம்.களில் பணம் தீர்ந்து போனது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது. 2 நாட்களில் சுமார் ரூ.650 கோடி ரொக்கம் மற்றும் காசோலை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News