உள்ளூர் செய்திகள்
விபத்து

செய்யாறு அருகே கார் மரத்தில் மோதி வாலிபர் பலி

Published On 2021-12-11 16:39 IST   |   Update On 2021-12-11 16:39:00 IST
செய்யாறு அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த குத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் (வயது 70), இவரது மனைவி நாகபூ‌ஷணம் (62), மகன் பூபாலன் (35), மருமகள் உமா மகேஸ்வரி (33), உறவினர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கடப்பேரி கிராமத்தை சேர்ந்த குமார் (40), ஆகியோர்கள் நேற்று உறவினரின் நிச்சயதார்த்த விழாவிற்கு செய்யாறு அடுத்த நாவல்பாக்கம் கிராமத்திற்கு சென்றனர்.

பின்னர் இரவு சுமார் 10.45 மணிக்கு செய்யாறில் இருந்து ஆற்காடு சாலையில் துளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்பக்க டயர் வெடித்து கார் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் செய்யாறு அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார்.

படுகாயமடைந்த 4 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Similar News