உள்ளூர் செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி

லத்தேரி அருகே பாம்பு கடித்து பெண் பலி

Published On 2021-12-10 15:00 IST   |   Update On 2021-12-10 15:00:00 IST
லத்தேரி அருகே மாந்தோப்புக்கு சென்ற பெண் பாம்பு கடித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பனமடங்கி ஊராட்சிக்கு உட்பட்ட கேசவாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது 22). இவர், வீட்டின் அருகே உள்ள மாந்தோப்புக்கு சென்றார். அப்போது பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஸ்ரீதேவி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பனமடங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News