உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
வேலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு வடக்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 29), தச்சுத்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும் பேச்சு குறைபாடுடைய 15 வயது மாணவிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி அவருடைய பாட்டியிடம் கதறி அழுதபடி கூறி உள்ளார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து திருமாலை கைது செய்தார்.
வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு வடக்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 29), தச்சுத்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும் பேச்சு குறைபாடுடைய 15 வயது மாணவிக்கு கடந்த சில நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி அவருடைய பாட்டியிடம் கதறி அழுதபடி கூறி உள்ளார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து திருமாலை கைது செய்தார்.