உள்ளூர் செய்திகள்
போளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
போளூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று போளூர் நரிக்குன்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் (36) கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 50 கிராம் எடையுள்ள இரண்டு கஞ்சா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.