உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி

Published On 2021-12-01 10:08 GMT   |   Update On 2021-12-01 10:08 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்கு 245 பேர் பலியாகி உள்ளனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 104 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 848 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு சிறுவாச்சூரைச்சேர்ந்த 85 வயது முதியவர் உயிரிழந்தார். இதுவரை கொரோனாவிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 245 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது மொத்தம் 11 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 6 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 3 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 20 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 507 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,079 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Tags:    

Similar News