செய்திகள்
வேலூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
வேலூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவருடைய மனைவி சவுந்தரி (வயது 45). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று சவுந்தரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.