செய்திகள்
மரணம்

விருதுநகர் அருகே தொழிலாளி மர்மமரணம்

Published On 2021-11-17 15:29 IST   |   Update On 2021-11-17 15:29:00 IST
விருதுநகர் அருகே தொழிலாளி வீட்டு வாசலில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

நெல்லை டவுன் ஜவகர்லால் தெருவைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (வயது 42). ஜே.சி.பி. டிரைவரான இவர் விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணியில் வேலை பார்த்து வந்தார்.

இதற்காக முத்துகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் அருகே உள்ள மெட்டுக்குண்டுவில் கனக ராஜ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்.

சம்பவத்தன்று முத்து கிருஷ்ணன் தனது வீட்டு வாசலில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது வீட்டின் கதவுகளும் திறந்திருந்தது. இதைப்பார்த்து வீட்டு உரிமையாளர் கனகராஜ் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி மதன் குமார் சூலக்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துகிருஷ்ணன் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News