செய்திகள் (Tamil News)
டெங்கு கொசு

திருவேற்காடு நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 100 தொழிலாளர்கள்

Published On 2021-11-16 09:48 GMT   |   Update On 2021-11-16 09:48 GMT
தேவையற்ற பொருட்களில் தேங்கியுள்ள நன்னீரில் டெங்கு கொசு முட்டைகள், புழுக்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்து அதனை ஒழிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பூந்தமல்லி:

சென்னை புறநகர் பகுதியான திருவேற்காட்டில் டெங்கு பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கொசுப்புழு ஆதாரங்களை அழிப்பதற்காக நகராட்சியிலிருந்து 100 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் வீடுகள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தேவையற்ற பொருட்களில் தேங்கியுள்ள நன்னீரில் டெங்கு கொசு முட்டைகள், புழுக்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்து அதனை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் குறித்தும் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நகராட்சி கமி‌ஷனர் வசந்தி தலைமையில் நகராட்சி பொறியாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மேற்பார்வையில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காலி மனைகளில் தேங்கியுள்ள நீரில் ஆயில் பால் போடப்பட்டது.

இதன் மூலம் கொசு முட்டை, கொசு உற்பத்தியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News