செய்திகள்
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி- புதுவை மாணவர்களுக்கு கவர்னர் பாராட்டு

Published On 2021-11-15 02:48 GMT   |   Update On 2021-11-15 02:48 GMT
நம்பிக்கையோடு முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த மாணவர்களுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டை விட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம்பிக்கையோடு முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த மாணவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில் ‘இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் நாட்டின் விலை மதிப்பற்ற சொத்து. அவர்களுடைய கல்வி, சமூக உரிமைகளை பாதுகாக்க உறுதி ஏற்போம். குழந்தைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News