செய்திகள்
விருதுநகர் அருகே சூதாடிய 2 பேர் கைது
விருதுநகர் அருகே சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் புறநகர் போலீசார் ரோந்து சென்ற போது காந்திநகரில்உள்ள வீட்டுக்கு பின்புறம் உள்ள பகுதியில் காந்தி நகரை சேர்ந்த கணேசன் (வயது 46), அல்லம்பட்டி பாரதி நகரை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (67) ஆகிய 2 பேரும் காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றபோது அவர்களை சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.