செய்திகள்
விபத்து பலி

கறம்பக்குடி அருகே சாலை விபத்து- ஆட்டோ டிரைவர் பலி

Published On 2021-11-06 10:17 GMT   |   Update On 2021-11-06 10:17 GMT
கறம்பக்குடி அருகே சாலை விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறம்பக்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவர் கறம்பக்குடியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கார்த்திகா ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சம்பவத்தன்று கறம்பக்குடியில் இருந்து ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ராங்கியன் விடுதிக்குச் சென்றார். அங்கு பயணிகளை இறக்கிவிட்டு அவர் மட்டும் ஆட்டோவை ஓட்டி கொண்டு கறம்பக்குடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பிள்ளகுறிச்சி சாலையில் வந்த போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியனை, அப்பகுதி மக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News