செய்திகள்
தற்கொலை

நன்னிலம் அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2021-11-05 13:58 GMT   |   Update On 2021-11-05 13:58 GMT
நன்னிலம் அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள அன்னதானபுரம், மேலே தெருவைச் சேர்ந்த ராஜன் மற்றும் அவரது மனைவி ருக்மணி ஆகிய இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிஷாந்த் (வயது 8), சுதீஷ் (6) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனா.

கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ருக்மணி, துப்பட்டாவால் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ருக்மணியின் தந்தை ராமதாஸ் காரைக்கால் அரசு மருத்துவமனை வைக்கப்பட்டிருந்த தனது மகளின் உடலை பார்த்த கதறி அழுதார். பின்னர் ராமதாஸ் பேரளம் போலீசில் தனது மகள் மரணத்திற்கு காரணமாக இருந்த மருமகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News