செய்திகள்
மழை

நீலகிரி மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள்

Published On 2021-11-05 18:23 IST   |   Update On 2021-11-05 18:23:00 IST
நீலகிரி மாவட்த்தில் எஸ்டேட்டுகளில் கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டி,:

ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த தாலுகா பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அவர்கள் தேயிலை தோட்டங்களையொட்டிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.

ஆனாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயிருக்கு பாதுகாப்பு இன்றி மழையால் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகின்றனர்.

பலத்த மழை இருந்தும் பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறோம். வேலைக்கு வந்தால் மட்டுமே சம்பளம் உண்டு. வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி கொட்டும் மழையிலும் பணியாற்றுகிறோம். மழை பெய்வதால் பல நாட்கள் வேலைக்கு செல்லாமல் சம்பளம் இன்றி வீட்டில் இருக்க முடியாது. வேலைக்கு வந்து தான் ஆக வேண்டும். எனவே அதிகாரிகள் எங்களது நிலைமையை கருத்தில் கொண்டு பலத்த மழையின்போது சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News