செய்திகள்
முத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ராமசாமி மீது மோதியது. இதில் ராமசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
வெள்ளகோவில்:
ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் ராமசாமி (வயது52). முருங்கை காய் கொள்முதல் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கந்தசாமி பாளையத்தில் இருந்து முத்தூர் நோக்கி பைக்கில் பழனியாண்டபுரம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது முத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ராமசாமி மீது மோதியது.
இதில் ராமசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமசாமியை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.