செய்திகள்
கோப்பு படம்

வேப்பந்தட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2021-11-02 14:04 GMT   |   Update On 2021-11-02 14:04 GMT
வேப்பந்தட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 58). இவர் நேற்று தனது வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை பார்ப்பதற்காக வயலுக்கு சென்றார். அப்போது வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வி.களத்தூர் போலீசார் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News