செய்திகள்
கொள்ளை

பணகுடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு

Published On 2021-11-02 13:57 GMT   |   Update On 2021-11-02 13:57 GMT
பணகுடி அருகே பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி பிரவீனா (வயது22).

இவரது சொந்த ஊர் கங்கை கொண்டான் அருகே உள்ள துறையூரில் உள்ளது. சமீபத்தில் துறையூரில் நடந்த கோவில் விழாவிற்கு பிரவீனா சென்றிருந்தார். அங்கிருந்து ஊருக்கு திரும்பும் போது ஒரு பையில் தனது நகைகள் மற்றும் ஆடைகளை வைத்திருந்தார்.

பணகுடி பஸ் நிலையத்தில் வந்து இறங்கும் போது கூட்ட நெரிசலில் நகை பை திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்த போது தங்க நகைகளை காணவில்லை.

அதில் 10 பவுன் எடை உள்ள நெக்லஸ், வளையல் போன்ற நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுகுறித்து பிரவீனா பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News