செய்திகள்
கைது

சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2021-11-01 12:07 GMT   |   Update On 2021-11-01 12:07 GMT
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், முருகன், வேலு மற்றும் போலீசார் சேத்துப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேத்துப்பட்டு அருகே உள்ள அனாதிமங்கலம் ஏரிக்கரையில் வேகமாக வந்த 2 சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்து, சேத்துப்பட்டு அருகே உள்ள ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியாண்டவர் (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கம் துரை (25) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News