செய்திகள்
தற்கொலை

எருமப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-11-01 10:09 GMT   |   Update On 2021-11-01 10:09 GMT
எருமப்பட்டி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருமப்பட்டி:

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லையன் (வயது 65). இவர் எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் உள்ள செங்கல்சூளையில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார் இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News