செய்திகள்
அரிவாள் வெட்டு

படப்பை அருகே வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2021-10-25 12:45 GMT   |   Update On 2021-10-25 12:45 GMT
படப்பை அருகே வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி ஊராட்சியில் உள்ள நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 19). நேற்று இவர் அதே பகுதியில் நண்பர்களுடன் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது தகராறு ஏற்பட்டது. தகராறில் 2 பேர் அரிவாளால் அஜித்தின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி்ச் சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அஜித் அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரத்தகாயத்துடன் கிடந்த அஜித்தை மீட்டு சிகி்ச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அஜித்தை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News