செய்திகள்
உயிரிழப்பு

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2021-10-23 07:25 GMT   |   Update On 2021-10-23 07:25 GMT
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு பச்சப்பாளி மாயவன் கோவில் வீதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). எலெக்ட்ரீசியன். இவரது மனைவி பிருந்தா.

உதயகுமார் ஈரோடு குதிரைபாளியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் மின்மோட்டார் பொருத்தும் பணிக்கு சென்றார்.

இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அங்கன்வாடி மையத்துக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த ஒரு அறையில் மின்மோட்டார் அருகே ஒயரை பிடித்த நிலையில் மின்சாரம் தாக்கி உட்கார்ந்த நிலையில் உதயகுமார் இருந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உதயகுமாரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உதயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News