செய்திகள்
சூளகிரி அருகே செல்போன் திருட்டு
சூளகிரி அருகே செல்போன் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே காமன்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப் (40), சம்பவத்தன்று இவர், அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். அப்போது அங்குள்ள மேஜையில் செல்போனை வைத்துள்ளார். அதனை 25 வயது வாலிபர் ஒருவர் திருடி விட்டு ஓடியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.