செய்திகள்
கைது

அணைக்கட்டு அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-09-04 16:57 IST   |   Update On 2021-09-04 16:57:00 IST
அணைக்கட்டு அருகே கலெக்டர் உத்தரவின் பேரில் பெண் சாராய வியாபாரி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலூர்:

அணைக்கட்டு அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரோசி (வயது 55). சாராய வியாபாரம் செய்து வந்த இவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து சாராயம் காய்ச்சி வந்ததால் ரோசி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரை செய்தார்.

கலெக்டர் உத்தரவின் பேரில் ரோசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Similar News