செய்திகள்
வேலூரில் சாலையில் மயங்கி விழுந்து வியாபாரி திடீர் மரணம்
வேலூரில் சாலையில் மயங்கி விழுந்து வியாபாரி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது65). கருவாடு வியாபாரி.நேற்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சாமூவேல் நகர் பகுதியில் கருவாடு விற்று வந்துள்ளார்.
சாலையில் செல்லும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையிலேயே மயங்கி விழுந்தார். பொது மக்கள் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேலூர் வடக்கு போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு அவருடைய உறவினரிடம் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.