செய்திகள்
தற்கொலை

குடியாத்தத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-08-30 10:06 GMT   |   Update On 2021-08-30 10:06 GMT
குடியாத்தத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர்ரோடு காந்திநகர் புத்துக்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 74). இவருக்கு வித்யா என்ற மனைவியும். ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். நேற்று மதியம் பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் வித்யா புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News