செய்திகள்
திருக்கடையூர் அருகே சாராயம் விற்றவர் கைது
திருக்கடையூர் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கடையூர்:
பொறையாறு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருக்கடையூர் அருகே மருதம்பள்ளம் பிரதான சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், குமாரகுடி தெற்கு தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என்பதும், மருதம்பள்ளம் பகுதியில் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.