செய்திகள்
பள்ளிகொண்டா அருகே பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு
பள்ளிகொண்டா அருகே பஸ் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:
பள்ளிகொண்டாவை அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விவேக் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேலூரிலிருந்து திப்பசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு சாலையில் செல்லும் போது பின்னால் அதிவேகமாக திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் விவேக்தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சென்று விவேக் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகொண்டாவை அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் விவேக் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேலூரிலிருந்து திப்பசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இணைப்பு சாலையில் செல்லும் போது பின்னால் அதிவேகமாக திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் விவேக்தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சென்று விவேக் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.