செய்திகள்
கொரோனா தடுப்பூசி மையத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் தயங்க கூடாது - கலெக்டர் லலிதா அறிவுரை

Published On 2021-08-24 19:34 IST   |   Update On 2021-08-24 19:34:00 IST
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்த கலெக்டர் லலிதா தடுப்பூசி செலுத்த மக்கள் தயங்க கூடாது என்று கூறினார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் லலிதா கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுக்கு இணங்க மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 2 லட்சத்து 15 ஆயிரத்து 931 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 35 ஆயிரத்து 387 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 318 பேருக்கு

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை பொறுத்தவரை தேவைக்கு ஏற்ப போதுமான அளவு கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மகேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரத்சுந்தர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எடக்குடி வடபாதி, காரைமேடு, புங்கனூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பயணிகள் நிழலக கட்டிடம், பசுமை வீடுகள், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஒன்றிய ஆணையர் அருள்மொழியிடம் பணிகளை தரமாக விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து ஊராட்சியில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ.10 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் தரம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார் பின்னர் ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம், அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நடும் பணியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார். அப்ேபாது ஆணையர்கள் அருள்மொழி, கஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் தாரா, ஊராட்சி தலைவர்கள் ஜுனைதா பேகம் கமாலுதீன், அஞ்சம்மாள், வஜுரூதீன், ஊராட்சி துணை தலைவர்கள், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News