செய்திகள்
திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு முதியவர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் நேற்று மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும், என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் நேற்று மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும், என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.