செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 57 பேர் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 57 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 57 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் இந்நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார். மேலும் 55 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 544 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 52 ஆயிரத்து 336 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 51 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து உள்ளனர். 639 பேர் உயிரிழந்து உள்ளனர்.