செய்திகள்
கொரோனா தடுப்பூசி

காளையார்கோவில் அருகே 476 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-07-30 10:40 GMT   |   Update On 2021-07-30 10:40 GMT
காளையார்கோவில் ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவில் அருகில் தனியார் மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
காளையார்கோவில்:

காளையார்கோவில் ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர் கோவில் அருகில் தனியார் மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 476 பேர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதை தொடர்ந்து காளையார்கோவில் அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News