செய்திகள்
கிராமத்துக்குள் புகுந்த கரடி

கிராமத்துக்குள் புகுந்த கரடியால் பொதுமக்கள் அச்சம்

Published On 2021-06-21 17:31 IST   |   Update On 2021-06-21 17:31:00 IST
வீட்டினுள் ஆட்கள் இருப்பதை கண்ட கரடி திரும்பி சென்றது. பின்னர் தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளது. அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி புகுந்து வருகின்றன. ஊட்டி அருகே கொடலட்டி கிராமத்தில் 50-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தையொட்டி தேயிலை தோட்டங்கள் உள்ளது.

இந்தநிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக கரடி ஒன்று கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே நுழைந்தது. வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி வீட்டின் கதவை தட்டியது. இதனை வீட்டில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். வீட்டினுள் ஆட்கள் இருப்பதை கண்ட கரடி திரும்பி சென்றது. பின்னர் தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Similar News