செய்திகள்
மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. கடல்போல் காட்சியளிக்கும் அணையை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
கிருஷ்ணராயபுரம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு கடந்த 14-ந்தேதி அதிகாலை வரத்தொடங்கியது. அன்று கதவணைக்கு வினாடிக்கு 4000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டது.
பின்னர் 15-ந்தேதி அன்று கதவணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இப்படியாக இந்த கதவணைக்கு தண்ணீர் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இதையடுத்து இந்த தண்ணீரை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அணை கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு கடந்த 14-ந்தேதி அதிகாலை வரத்தொடங்கியது. அன்று கதவணைக்கு வினாடிக்கு 4000 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டது.
பின்னர் 15-ந்தேதி அன்று கதவணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இப்படியாக இந்த கதவணைக்கு தண்ணீர் படிப்படியாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இதையடுத்து இந்த தண்ணீரை அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அணை கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.