உலகம்

பிரேசில்-பராகுவே இணைப்பு பாலத்தை திறந்து வைத்தார் அதிபர் லூலா

Published On 2025-12-22 05:13 IST   |   Update On 2025-12-22 05:13:00 IST
  • பராகுவே-பிரேசிலை இணைக்கும் பாலம் 2022-ல் கட்டி முடிக்கப்பட்டது.
  • இரு நாடுகளின் உறவில் நிலவிய சிக்கலால் இப்பாலம் திறக்கப்படவில்லை.

பிரேசிலியா:

தென் அமெரிக்க நாடுகளான பராகுவே மற்றும் பிரேசிலை இணைக்கும் விதமாக 2022-ம் ஆண்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இரு நாடுகளின் உறவில் நிலவிய சிக்கல் காரணமாக இந்தப் பாலம் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கலந்த்கொண்டு இந்தப் பாலத்தை தற்போது திறந்து வைத்தார்.

பரானா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் ஃபோஸ் டு லுகா மற்றும் பிரெசிடென்ட் பிரான்கோ நகரங்களை இணைக்கிறது.

பழைய பாலத்தின் நெரிசலில் இருந்து கனரக வாகனங்களை விடுவிக்க இந்தப் பாலம் உறுதுணையாக இருக்கும். மேலும், தென் அமெரிக்காவின் அட்லாண்டிக்-பசிபிக் வர்த்தகப் பாதைக்கு உதவுகிறது.

Tags:    

Similar News